×

கப்பலில் பூச்சி மருந்து தெளித்த தொழிலாளி மூச்சுத்திணறி சாவு

தண்டையார்பேட்டை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி(43). திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் மூலம் சென்னை துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்படும் உணவு பொருட்களை பூச்சிகள் சேதப்படுத்தாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வியட்நாம் செல்லும் கப்பலில் மக்காச்சோளம் ஏற்றி வைத்திருந்த அறைகளை சுற்றிலும் பூச்சி மருந்து தெளித்தனர். பின்னர் கப்பலில் உள்ள மற்றொரு அறையில் பூச்சி மருந்து தெளிக்க சிறிய பாதை வழியாக ராமசாமி சென்றார். நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் அவரை பார்ப்பதற்காக ஜெகதீசன் சிறிய அறைக்குள் சென்றுள்ளார். அவரும் வெளியில் வரவில்லை. இதையடுத்து கப்பல் கேப்டனுக்கு தகவல் தெரிவித்து ஹைட்ராலிக் கேட்டை திறந்து பார்த்தபோது, 2 பேரும் சுயநினைவின்றி மயங்கி கிடந்தனர். உடனே இருவரையும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராமசாமி பரிதாபமாக இறந்தார். ஜெகதீசன் தேனாம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

The post கப்பலில் பூச்சி மருந்து தெளித்த தொழிலாளி மூச்சுத்திணறி சாவு appeared first on Dinakaran.

Tags : Kandadarpet ,Ramasamy ,Virudhunagar district ,Thiruvallur district ,Jekadeesan ,Anea Chau ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...